தெற்காசிய கண்டத்தின் முதல் மன்னன் ஸ்ரீமாறன்இந்தோ – சீனாவில், பண்டைக் காலத்தில் தோன்றிய மற்றோர் அரசு, சம்பா (Champa).இன்றைக்குத் தென்வியட்நாம் (South Vietnam) என வழங்கும் நாடே, இந்நூற்றாண்டின் முற்பகுதிவரை ‘அன்னாம்’ (Annam) என்றும், பழங்காலத்தில் ‘சம்பா’ என்ற புகழ்மிக்க நாடாகவும் திகழ்ந்தது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு அளவில்தான் அந்நாட்டிற்கு ‘அன்னாம்’ என்னும் பெயர் வழங்கத் தொடங்கியது. காம்பூச்சியாவிற்குக் கிழக்கேயுள்ள பகுதியே, ‘சம்பா’ எனும் நாடாகும்.சம்பா : பெயர் விளக்கம்’சம்பா’…
-
-
கடாரம் கொண்டான் சுந்தரபாண்டியன்
சைலேந்திரப் பேரரசின் சந்திரபானு என்ற அரசன், பாண்டியப் பேரரசரின் வீரத்தை உணராமல் போருக்கு செல்வோம் என்ற எண்ணம் வரும் பொழுதே அவனது தோல்வி நிச்சயமானதாகி விட்டது. சுமத்திராவை ஆண்ட சந்திரபானுவை எதிர்த்து, பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264-இல் வெற்றியடைந்ததைப் பற்றிய கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது. அதில், கடாரம் (கடாஹா) எனப்படும் பகுதியைப் பாண்டியன் கைப்பற்றியதைப் பெருமிதமாகக் கூறுகிறது. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 1250 – 1284
-
பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு.
பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாண்டிய வரலாற்றை ஆவணப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறோம். மற்ற தேசங்களில் இல்லாத அளவிற்கு மன்னர்களின் புகழையும் அவர்களின் வீர தீர சாகச செயல்களையும் மற்றும் கொடைகளையும் ஆவணப்படுத்தி வருகிறோம் அது மட்டும் இன்றி ஒவ்வொரு மன்னர்களுக்கும் பிரத்தியேகமாக தனி வரலாறும் எழுதி வருகிறோம். மன்னர்களின் பிறந்தநாள்விழா விமர்சியாக கொண்டாடியும் வருகிறோம். மேற்கொண்டு பல மன்னர்களது…
-
போடி அருகே வரகுண பாண்டியன் கால கல்வெட்டு கண்டெடுப்பு
போடி அருகே வரகுண பாண்டியன் கால கல்வெட்டு கண்டெடுப்பு 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது போடி : போடி அருகே, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரகுண பாண்டியன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.போடியில் இருந்து 8 கி.மீ தொலைவில் டொம்புச்சேரி மற்றும்என்றும், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி கிராமப் பகுதிகள் திருவிடைபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. மேலும் இந்த கிராமப் பகுதியில் முன்பு சிவன் கோயில், பெருமாள் கோயில் இருந்ததாகவும் சிவன் கோயிலுக்கு 100…
-
“புலிதேவன்” எனும் பட்டப்பெயர்
மதுரையை அடுத்துள்ள நாகமலையில் உள்ள குகை ஒன்றில் புலி ஒன்று இருந்து கொண்டு ஊர் மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தது. அப் புலியின் தொல்லை குறித்து ஊர் மக்கள் மன்னனிடம் தெரிவித்தனர். அது அறிந்த மன்னன் வரகுண சிந்தாமணி பாண்டியன் வீரர் பலரை அழைத்துக் கொண்டு புலிக்குகையை அடைந்தார். வீரர்கள் புலியைக் கொல்லக் குகையினுள் சென்று திரும்பி வரவில்லை. சிந்தாமணி பாண்டியன் ஆவுடையார்புரம் குறுநில ராஜாவை அழைத்துக் குகையினுள்சென்று புலியைக்…
-
அம்பாசமுத்திரம் பகுதியில் முற்காலப் பாண்டியர் காலச் சிற்பங்கள்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் அரிகேசரிநல்லூர் ஆகிய ஊர்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோயிற் களஆய்வுகளின் போது இதுவரை அறியப்படாத முற்காலப் பாண்டியர்களின் காலத்தைச்சேர்ந்த சிற்பங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்களின் காலத்தை கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக்கொள்ளலாம். அம்பாசமுத்திரம் திருமூலநாதசுவாமி கோயிலுள்ள பிற்காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் சன்னதியின் கருவறையில் முற்காலப் பாண்டியர் காலத்தைச்சேர்ந்த திருமாலின் நெடிய சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இச்சிற்பத்தில் திருமால் சமபாதஸ்தானக நிலையில் நின்றவாறு…
-
பராந்தக நெடுஞ்சடைய பாண்டியன் மெய்க்கீர்த்தி விளக்கம்
பராந்தக நெடுஞ்சடைய பாண்டியன் மெய்க்கீர்த்தி விளக்கம் களப்பிரர் ஆட்சியை அழித்துப் பாண்டியப் பேரரசினைத் தோற்றுவித்த கடுங்கோனுக்குப் பிறகு முறையே மாறவர்மன், அவனிசூளாமணி, சேந்தன், சீமாறவர்மன், கோச்சடையன் ஆகிய மன்னர் பாண்டி மண்டலத்தை ஆண்டு வந்துள்ளனர்.கோச்சடையனை அடுத்துப் பாண்டிய நாட்டை ஆண்டவன் அவன் மகன் தேர்மாறன் என்பவன்.தேர்மாறனுடைய மகன் சடிலன் பராந்தகன் என்றும், பராந்தகன் நெடுஞ்சடையன் என்றும் பெயர் பெற்றவன்.கங்க நாட்டு இளவரசி பூசுந்தரியின் வயிற்றுதித்தவன்.அந்நெடுஞ்சடையன் வேள்விக்குடி என்னும் ஊரை ஒரு…
-
அம்பிகை மாலை
அம்பிகை மாலை ஏடுகள்-18 இது மதுரை மீனாட்சியம்மன் தோத்திரம். இதனை இயற்றியவர் குலசேகர பாண்டியர் என்பதும் இது முப்பது கலித்துறைகளையுடையது என்பதும் ‘பிடித்தாரைக் கட்டி’ என்னும் ஈற்றுச் செய்யுளால் விளங்கும். இப்பிரதி சிற்சில இடங்களில் சிதிலமாயிருக்கிறது. இது தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலெல்லாம் கற்கும் வழக்குடையது.இந்தப்பிரதியில் 28 செய்யுட்களே இருக்கின்றன.இது அச்சிடப்பட்டிருக்கிறது. பாண்டியர்கள்_தேடி_பயணம்
-
கொசக்குடிப் பெருமாள் கோயில்
கொசக்குடிப் பெருமாள் கோயில் பாகம் 2 திருநெல்வேலி கீழ் வேம்பு நாட்டுத் திருநெல்வேலியில் புதிய இடத்து வீடாக இருக்க மன்னன் முடிவெடுத்துள்ளான். அங்கிருந்து இவ்வாணையை வெளியிட்டுள்ளான். ஆணையில் சுத்த விக்கிரமன் ஒப்பமிட்டுள்ளான். பகழிக் கூத்தர் கோயிலில் வரும் வீர கேரளனுடைய கல்வெட்டிலும் இவ்விக்கிரமன் இடம் பெற்றுள்ளான். கேரள அரசர்களுக்குப் பல்வேறு தலை நகரங்கள் இருந்துள்ளன. திருநெல்வேலியும் கி.பி.1437-38 இல் தலைநகராக இருந்துள்ளது என்பதைக் கல்லெட்டின் மூலம் அறிகிறோம். வைஷ்ணவ துறவி:…
-
கொசக்குடிப் பெருமாள் கோயில்
கொசக்குடிப்_பெருமாள்_கோயில் பாகம்3 பாண்டியமன்னர் கொசக்குடிப் பெருமாள் கோயில் கருவறை தென்புறச் சுவரில் குலசேகரப் பாண்டியன் கல்வெட்டும் கோயில் முன்மண்டபம் கிழக்குச் சுவரில் வீரபாண்டியன் கல்வெட்டும் உள்ளன என்பதை முன்பே கண்டோம். முதல் கல்வெட்டு ஆட்சியாண்டு இல்லை. இரண்டாம் கல்வெட்டில் உள்ளது. இங்குக் குறிக்கப்படும் இரு அரசர் பெயர்களில் பலர் உள்ளனர். கல்வெட்டறிஞர் குடந்தை சேதுராமன், பாண்டிய மன்னர் பலரை இனங் கண்டுள்ளார். அவருடைய பாண்டிய வரலாற்றிலும் இங்குக் குறிக்கப்படும் அரசர்கள்…