மறுபிறப்பு எடுக்கும் மறவர் பட்டி பெருமாள் கோயில்!!! கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி 2021 மறவ பட்டியில் இருக்கும் இக்கோயிலுக்கு நேரடி நமது குழு மூலமாக ஆய்வுக்கு சென்றோம் கோயில் பற்றிய பல தகவல்களை சேகரித்துக் கொண்டு கோவிலுக்கு பாத்தியப்பட்டவர்களை பற்றி விசாரித்தோம் . அப்போது கோயில் ஓரளவு சீரமைக்கப்பட்டு வேண்டிய சூழ்நிலை இருந்தது அதன் பிறகு மீண்டும் பத்து நாட்கள் கழித்து ஆகஸ்ட் 23ஆம் தேதி…
-
-
கொற்றவை (Kottravai)
தமிழ்நாட்டில் தாய்த்தெய்வ வழிபாட்டிற்கு ஒரு சிறப்பிடம் பண்டு தொட்டு இருந்து வருகிறது. உலக அளவில் நோக்கினாலும் பெண் தெய்வ வழிபாடு முதன்மை பெற்றிருப்பதை அறிய முடிகிறது. சிந்து சமவெளியில் நடைபெற்ற அகழ்வாய்வுகளும் பெண் தெய்வ வழிபாட்டின் முதன்மையை, சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. வழிபாட்டு வளர்ச்சியில் படைத்தல் என்னும் ஒரு பெரிய செயல் பெண்ணிடம் இருப்பதை அறிந்த மானிடம் பெண்களுக்கு முதன்மை அளித்து பெண்மையைப் போற்றி வழிபட்டு வந்துள்ளதை நாம் காண்கிறோம்.…
-
கி.பி.10-ம் நூற்றாண்டு `கொற்றவை’ சிலை கண்டுபிடிப்பு!- பெண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள்
கி.பி.10-ம் நூற்றாண்டு `கொற்றவை’ சிலை கண்டுபிடிப்பு!- பெண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள் சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த 1,000 ஆண்டுக்கால பழைமையான சோழர் சிற்பம் ஒன்று, வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம், திம்மாம்பேட்டை எனும் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் பிரபு, ஆய்வு மாணவர்கள் சரவணன், கௌரிசங்கர் ஆகியோர் அடங்கிய குழு, திம்மாம்பேட்டை கிராமத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது, அங்கிருந்த காளியம்மன்…
-
பராந்தக நெடுஞ்சடைய பாண்டியன் மெய்க்கீர்த்தி விளக்கம்
பராந்தக நெடுஞ்சடைய பாண்டியன் மெய்க்கீர்த்தி விளக்கம் களப்பிரர் ஆட்சியை அழித்துப் பாண்டியப் பேரரசினைத் தோற்றுவித்த கடுங்கோனுக்குப் பிறகு முறையே மாறவர்மன், அவனிசூளாமணி, சேந்தன், சீமாறவர்மன், கோச்சடையன் ஆகிய மன்னர் பாண்டி மண்டலத்தை ஆண்டு வந்துள்ளனர்.கோச்சடையனை அடுத்துப் பாண்டிய நாட்டை ஆண்டவன் அவன் மகன் தேர்மாறன் என்பவன்.தேர்மாறனுடைய மகன் சடிலன் பராந்தகன் என்றும், பராந்தகன் நெடுஞ்சடையன் என்றும் பெயர் பெற்றவன்.கங்க நாட்டு இளவரசி பூசுந்தரியின் வயிற்றுதித்தவன்.அந்நெடுஞ்சடையன் வேள்விக்குடி என்னும் ஊரை ஒரு…