பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தில் கொற்றவைக்கு திருவிளக்கு பூஜை பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வுக் குழு மூலம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடத்தப்பட்டது இந்த பூஜை விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் பல பெண்கள் ஆர்வத்தோடு இந்த விளக்கு பூஜைகள் கலந்து கொண்டனர் மாத மாதம் இதை தொடர்ந்து நடத்த ஏற்பாடும் செய்துள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது மீண்டும் கொற்றவை தவ்வை…
-
-
அம்பாசமுத்திரம் பகுதியில் முற்காலப் பாண்டியர் காலச் சிற்பங்கள்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் அரிகேசரிநல்லூர் ஆகிய ஊர்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோயிற் களஆய்வுகளின் போது இதுவரை அறியப்படாத முற்காலப் பாண்டியர்களின் காலத்தைச்சேர்ந்த சிற்பங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்களின் காலத்தை கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக்கொள்ளலாம். அம்பாசமுத்திரம் திருமூலநாதசுவாமி கோயிலுள்ள பிற்காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் சன்னதியின் கருவறையில் முற்காலப் பாண்டியர் காலத்தைச்சேர்ந்த திருமாலின் நெடிய சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இச்சிற்பத்தில் திருமால் சமபாதஸ்தானக நிலையில் நின்றவாறு…
-
பிற்காலப் பாண்டியர் காலத்தில் கொற்கை
#பிற்காலப்பாண்டியர் காலத்தில் கொற்கை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. கொற்கைக்கு இரண்டு கல் தொலைவிலுள்ள ஆத்தூரில் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் என்னும் ஸ்ரீ வல்லபனின் ஆறாம் ஆட்சியாண்டுக் (கி.பி.1127) கல்வெட்டு கிடைத்துள்ளது. அது #அரசன் திருச்சிற்றம் பல தேவநல்லூரில் உள்ள நிலங்களுக்கு வரியை நிர்ணயம் செய்தான் என்று தெரிவிக்கையில், அவ்வூர் கொற்கை நாட்டில் உள்ளது என்று கூறுகிறது. ஊராக இருந்து கொற்கை ஒரு நாட்டின் தலைமையிடத்தை பெற்றுத் திகழ்ந்திருக்கிறது என்று மேற்கூறிய…