மாமன்னர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி கி.பி 1250-1284 “பூமலர் வளந் திகழ் திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப நாமலர் வளர் கலைவஞ்சி நலிமிகுமா மனத்துறையச் சிமையவரைத் திறல்மடந்தை திருத்தோளின் மிசைவாழ விமையவர்கோ னன்றிட்ட வெழிலாரங் கழுத்திலங்கப் பகிரதிபோற் றுய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந் தோட்டத் திகிரிவரைக் கப்புறத்துச் செழுந்திகிரி சென்றுலவத் தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார் நிழற்ற வெங்கோபக் கலிகடந்து செங்கோலெண் டிசை நடப்பச் செம்முரசின் முகில் முழங்கச் சிலையகன்று விசும்…
-
-
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மால்லபுரம் கல்வெட்டு
சோழப் பேரரசை வீழ்த்திய மன்னர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியருடைய கல்வெட்டு ஒன்று மாமல்லபுரத்தில் உள்ளது. அது இம்மன்னனுடைய 13ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் சுந்தரபாண்டிய தேவரின் திருமேனிக்கு நன்றாகக் கடல் மல்லைப் பெருமானுக்கு ஒரு விசேஷ வழிபாட்டை ஆமூர் நாட்டுப் பைய்யனூரான ராஜகேசரி சதுர்வேதிமங்கலத்து மகாசபையோர் ஏற்படுத்தினர் என்ற செய்தியைக் காண்கிறோம். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சோழப் பேரரசை வீழ்த் தியபோது, நெல்லூர்ப் பகுதியை ஆண்டு வந்த தெலுங்குச் சோழர்…
-
பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு.
பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாண்டிய வரலாற்றை ஆவணப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறோம். மற்ற தேசங்களில் இல்லாத அளவிற்கு மன்னர்களின் புகழையும் அவர்களின் வீர தீர சாகச செயல்களையும் மற்றும் கொடைகளையும் ஆவணப்படுத்தி வருகிறோம் அது மட்டும் இன்றி ஒவ்வொரு மன்னர்களுக்கும் பிரத்தியேகமாக தனி வரலாறும் எழுதி வருகிறோம். மன்னர்களின் பிறந்தநாள்விழா விமர்சியாக கொண்டாடியும் வருகிறோம். மேற்கொண்டு பல மன்னர்களது…
-
கி.பி.10-ம் நூற்றாண்டு `கொற்றவை’ சிலை கண்டுபிடிப்பு!- பெண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள்
கி.பி.10-ம் நூற்றாண்டு `கொற்றவை’ சிலை கண்டுபிடிப்பு!- பெண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள் சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த 1,000 ஆண்டுக்கால பழைமையான சோழர் சிற்பம் ஒன்று, வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம், திம்மாம்பேட்டை எனும் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் பிரபு, ஆய்வு மாணவர்கள் சரவணன், கௌரிசங்கர் ஆகியோர் அடங்கிய குழு, திம்மாம்பேட்டை கிராமத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது, அங்கிருந்த காளியம்மன்…
-
அம்பாசமுத்திரம் பகுதியில் முற்காலப் பாண்டியர் காலச் சிற்பங்கள்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் அரிகேசரிநல்லூர் ஆகிய ஊர்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோயிற் களஆய்வுகளின் போது இதுவரை அறியப்படாத முற்காலப் பாண்டியர்களின் காலத்தைச்சேர்ந்த சிற்பங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்களின் காலத்தை கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக்கொள்ளலாம். அம்பாசமுத்திரம் திருமூலநாதசுவாமி கோயிலுள்ள பிற்காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் சன்னதியின் கருவறையில் முற்காலப் பாண்டியர் காலத்தைச்சேர்ந்த திருமாலின் நெடிய சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இச்சிற்பத்தில் திருமால் சமபாதஸ்தானக நிலையில் நின்றவாறு…
-
விஸ்வநாத நாயக்கர் 1535 கி.பி இல் பாளையக்கார் முறையை நிறுவினார்.
விஸ்வநாத நாயக்கர் 1535 கி.பி இல் பாளையக்கார் முறையை நிறுவினார். வரகுண சிந்தாமணி பூலித்தேவன் குறுநில மன்னராக பொறுப்பேற்ற ஆண்டு 1378 கி.பி 1535-1378=157 ஆண்டுகள் வரலாறு என்ன ஆனது என்று பல வரலாற்று ஆய்வாளர்கள் இதைப் பற்றி யோசிக்கவில்லை. விஸ்வநாத நாயக்கர் பாளையம் பிரிப்பதற்கு முன்பாக இருந்தது என்பதை சில மூடர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பாண்டிய வரலாறு குறித்து கொல்லம் கொண்டான் என்ற பாண்டியன் பற்றியும் 1715…