• inscription

    முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மால்லபுரம் கல்வெட்டு

    சோழப் பேரரசை வீழ்த்திய மன்னர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியருடைய கல்வெட்டு ஒன்று மாமல்லபுரத்தில் உள்ளது. அது இம்மன்னனுடைய 13ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் சுந்தரபாண்டிய தேவரின் திருமேனிக்கு நன்றாகக் கடல் மல்லைப் பெருமானுக்கு ஒரு விசேஷ வழிபாட்டை ஆமூர் நாட்டுப் பைய்யனூரான ராஜகேசரி சதுர்வேதிமங்கலத்து மகாசபையோர் ஏற்படுத்தினர் என்ற செய்தியைக் காண்கிறோம். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சோழப் பேரரசை வீழ்த் தியபோது, நெல்லூர்ப் பகுதியை ஆண்டு வந்த தெலுங்குச் சோழர்…