• Temple

    அம்பாசமுத்திரம் பகுதியில் முற்காலப் பாண்டியர் காலச் சிற்பங்கள்

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் அரிகேசரிநல்லூர் ஆகிய ஊர்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோயிற் களஆய்வுகளின் போது இதுவரை அறியப்படாத முற்காலப் பாண்டியர்களின் காலத்தைச்சேர்ந்த சிற்பங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்களின் காலத்தை கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக்கொள்ளலாம். அம்பாசமுத்திரம் திருமூலநாதசுவாமி கோயிலுள்ள பிற்காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் சன்னதியின் கருவறையில் முற்காலப் பாண்டியர் காலத்தைச்சேர்ந்த திருமாலின் நெடிய சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இச்சிற்பத்தில் திருமால் சமபாதஸ்தானக நிலையில் நின்றவாறு…

  • நடுகல்

    பாண்டிய குல பேரரசர்

    மு.சடையவர்மன் சுந்தரபாண்டியதேவர் புகழ்!!! வாழ்க!!! கி.பி. 1251-71 முடிசூடிய முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியதேவர் என்பார் பலநாடுகளை வென்றமையால் சுந்தர மகாராசாதி ராசபரமேசுவரன், எம் மண்டலமுங் கொண்டருளியவன் எல்லாந் தலையான பெருமாள் எனப் பல பட்டங்களைப் புனைந்து மக்களால் அழைக்கப்பட்டார். இவ்வேந்தர் பெருமான் சைவர்களால் கோயில் எனப் போற்றப்பெறும் தில்லைப் பெருங் கோயிலுக்கும், திருவரங்கம் பெரிய கோயிலுக்கும் பலதிருப்பணிகளைப் புரிந்துள்ளார். இவர் தில்லையிற் கூத்தப்பெருமானை வணங்கிப் பல துலாபாரதானங்கள் செய்தார். தில்லையம்…