• inscription

    முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி

    மாமன்னர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி கி.பி 1250-1284 “பூமலர் வளந் திகழ் திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப நாமலர் வளர் கலைவஞ்சி நலிமிகுமா மனத்துறையச் சிமையவரைத் திறல்மடந்தை திருத்தோளின் மிசைவாழ விமையவர்கோ னன்றிட்ட வெழிலாரங் கழுத்திலங்கப் பகிரதிபோற் றுய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந் தோட்டத் திகிரிவரைக் கப்புறத்துச் செழுந்திகிரி சென்றுலவத் தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார் நிழற்ற வெங்கோபக் கலிகடந்து செங்கோலெண் டிசை நடப்பச் செம்முரசின் முகில் முழங்கச் சிலையகன்று விசும்…

  • Temple

    அம்பாசமுத்திரம் பகுதியில் முற்காலப் பாண்டியர் காலச் சிற்பங்கள்

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் அரிகேசரிநல்லூர் ஆகிய ஊர்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோயிற் களஆய்வுகளின் போது இதுவரை அறியப்படாத முற்காலப் பாண்டியர்களின் காலத்தைச்சேர்ந்த சிற்பங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்களின் காலத்தை கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக்கொள்ளலாம். அம்பாசமுத்திரம் திருமூலநாதசுவாமி கோயிலுள்ள பிற்காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் சன்னதியின் கருவறையில் முற்காலப் பாண்டியர் காலத்தைச்சேர்ந்த திருமாலின் நெடிய சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இச்சிற்பத்தில் திருமால் சமபாதஸ்தானக நிலையில் நின்றவாறு…

  • Temple

    பராந்தக நெடுஞ்சடைய பாண்டியன் மெய்க்கீர்த்தி விளக்கம்

    பராந்தக நெடுஞ்சடைய பாண்டியன் மெய்க்கீர்த்தி விளக்கம் களப்பிரர் ஆட்சியை அழித்துப் பாண்டியப் பேரரசினைத் தோற்றுவித்த கடுங்கோனுக்குப் பிறகு முறையே மாறவர்மன், அவனிசூளாமணி, சேந்தன், சீமாறவர்மன், கோச்சடையன் ஆகிய மன்னர் பாண்டி மண்டலத்தை ஆண்டு வந்துள்ளனர்.கோச்சடையனை அடுத்துப் பாண்டிய நாட்டை ஆண்டவன் அவன் மகன் தேர்மாறன் என்பவன்.தேர்மாறனுடைய மகன் சடிலன் பராந்தகன் என்றும், பராந்தகன் நெடுஞ்சடையன் என்றும் பெயர் பெற்றவன்.கங்க நாட்டு இளவரசி பூசுந்தரியின் வயிற்றுதித்தவன்.அந்நெடுஞ்சடையன் வேள்விக்குடி என்னும் ஊரை ஒரு…

  • Temple

    அம்பிகை மாலை

    அம்பிகை மாலை ஏடுகள்-18 இது மதுரை மீனாட்சியம்மன் தோத்திரம். இதனை இயற்றியவர் குலசேகர பாண்டியர் என்பதும் இது முப்பது கலித்துறைகளையுடையது என்பதும் ‘பிடித்தாரைக் கட்டி’ என்னும் ஈற்றுச் செய்யுளால் விளங்கும். இப்பிரதி சிற்சில இடங்களில் சிதிலமாயிருக்கிறது. இது தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலெல்லாம் கற்கும் வழக்குடையது.இந்தப்பிரதியில் 28 செய்யுட்களே இருக்கின்றன.இது அச்சிடப்பட்டிருக்கிறது. பாண்டியர்கள்_தேடி_பயணம்

  • Temple

    கொசக்குடிப் பெருமாள் கோயில்

    கொசக்குடிப் பெருமாள் கோயில் பாகம் 2 திருநெல்வேலி கீழ் வேம்பு நாட்டுத் திருநெல்வேலியில் புதிய இடத்து வீடாக இருக்க மன்னன் முடிவெடுத்துள்ளான். அங்கிருந்து இவ்வாணையை வெளியிட்டுள்ளான். ஆணையில் சுத்த விக்கிரமன் ஒப்பமிட்டுள்ளான். பகழிக் கூத்தர் கோயிலில் வரும் வீர கேரளனுடைய கல்வெட்டிலும் இவ்விக்கிரமன் இடம் பெற்றுள்ளான். கேரள அரசர்களுக்குப் பல்வேறு தலை நகரங்கள் இருந்துள்ளன. திருநெல்வேலியும் கி.பி.1437-38 இல் தலைநகராக இருந்துள்ளது என்பதைக் கல்லெட்டின் மூலம் அறிகிறோம். வைஷ்ணவ துறவி:…

  • Temple

    கொசக்குடிப் பெருமாள் கோயில்

    கொசக்குடிப்_பெருமாள்_கோயில் பாகம்3 பாண்டியமன்னர் கொசக்குடிப் பெருமாள் கோயில் கருவறை தென்புறச் சுவரில் குலசேகரப் பாண்டியன் கல்வெட்டும் கோயில் முன்மண்டபம் கிழக்குச் சுவரில் வீரபாண்டியன் கல்வெட்டும் உள்ளன என்பதை முன்பே கண்டோம். முதல் கல்வெட்டு ஆட்சியாண்டு இல்லை. இரண்டாம் கல்வெட்டில் உள்ளது. இங்குக் குறிக்கப்படும் இரு அரசர் பெயர்களில் பலர் உள்ளனர். கல்வெட்டறிஞர் குடந்தை சேதுராமன், பாண்டிய மன்னர் பலரை இனங் கண்டுள்ளார். அவருடைய பாண்டிய வரலாற்றிலும் இங்குக் குறிக்கப்படும் அரசர்கள்…

  • Temple

    தென்காசி பாண்டியர் வரலாற்றில் மாற்றம்.

    தென்காசி பாண்டியர் வரலாற்றில் மாற்றம். இன்னும் சில முறையான ஆவணங்களிலும். படி எடுக்கபடாதா கல்வெட்டுகளும் இன்னும் கருவறை பகுதியில் படிக்க படாதா செப்பேடுகளும் முறையான ஆய்வுகள் மேற்கொண்டால் தென்காசி பாண்டியர் மற்றும் கயத்தாறு, வள்ளியூர் வரலாறும் தெளிவாக எடுத்துக் கொண்டு வர முடியும் . வரலாற்றில் நடந்த மாற்றம் அனைவரும் அறிய வரும். #பாண்டியர்கள்_தேடி_பயணம்#pandya#Kingdom#பிற்கால_மன்னர்கள்

  • நடுகல்

    பாண்டிய குல பேரரசர்

    மு.சடையவர்மன் சுந்தரபாண்டியதேவர் புகழ்!!! வாழ்க!!! கி.பி. 1251-71 முடிசூடிய முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியதேவர் என்பார் பலநாடுகளை வென்றமையால் சுந்தர மகாராசாதி ராசபரமேசுவரன், எம் மண்டலமுங் கொண்டருளியவன் எல்லாந் தலையான பெருமாள் எனப் பல பட்டங்களைப் புனைந்து மக்களால் அழைக்கப்பட்டார். இவ்வேந்தர் பெருமான் சைவர்களால் கோயில் எனப் போற்றப்பெறும் தில்லைப் பெருங் கோயிலுக்கும், திருவரங்கம் பெரிய கோயிலுக்கும் பலதிருப்பணிகளைப் புரிந்துள்ளார். இவர் தில்லையிற் கூத்தப்பெருமானை வணங்கிப் பல துலாபாரதானங்கள் செய்தார். தில்லையம்…