திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் அரிகேசரிநல்லூர் ஆகிய ஊர்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோயிற் களஆய்வுகளின் போது இதுவரை அறியப்படாத முற்காலப் பாண்டியர்களின் காலத்தைச்சேர்ந்த சிற்பங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்களின் காலத்தை கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக்கொள்ளலாம். அம்பாசமுத்திரம் திருமூலநாதசுவாமி கோயிலுள்ள பிற்காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் சன்னதியின் கருவறையில் முற்காலப் பாண்டியர் காலத்தைச்சேர்ந்த திருமாலின் நெடிய சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இச்சிற்பத்தில் திருமால் சமபாதஸ்தானக நிலையில் நின்றவாறு…
-
-
இரணியூர்
இரணியூர் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த ஊராகும். இவ்வூரைச் சார்ந்த ஊருணிக்கரைகளிலும், கண்மாய்க் கரைகளிலும், வயல் வெளிகளிலும் பல #முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அத்தாழிகளில் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு சிவப்பு நிறத்தில் செய்யப்பட்ட மட்கலங்கள் பல கிடைத்துள்ளன. இவை தொன்மைச் சிறப்பு உடையவை. சங்க காலத்திற்குச் சற்று பிற்பட்டவை. கி.பி. 4-5ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. எனவே, 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்கள். என்பது…