கொசக்குடிப் பெருமாள் கோயில் பாகம் 2 திருநெல்வேலி கீழ் வேம்பு நாட்டுத் திருநெல்வேலியில் புதிய இடத்து வீடாக இருக்க மன்னன் முடிவெடுத்துள்ளான். அங்கிருந்து இவ்வாணையை வெளியிட்டுள்ளான். ஆணையில் சுத்த விக்கிரமன் ஒப்பமிட்டுள்ளான். பகழிக் கூத்தர் கோயிலில் வரும் வீர கேரளனுடைய கல்வெட்டிலும் இவ்விக்கிரமன் இடம் பெற்றுள்ளான். கேரள அரசர்களுக்குப் பல்வேறு தலை நகரங்கள் இருந்துள்ளன. திருநெல்வேலியும் கி.பி.1437-38 இல் தலைநகராக இருந்துள்ளது என்பதைக் கல்லெட்டின் மூலம் அறிகிறோம். வைஷ்ணவ துறவி:…
-
-
கொசக்குடிப் பெருமாள் கோயில்
கொசக்குடிப்_பெருமாள்_கோயில் பாகம்3 பாண்டியமன்னர் கொசக்குடிப் பெருமாள் கோயில் கருவறை தென்புறச் சுவரில் குலசேகரப் பாண்டியன் கல்வெட்டும் கோயில் முன்மண்டபம் கிழக்குச் சுவரில் வீரபாண்டியன் கல்வெட்டும் உள்ளன என்பதை முன்பே கண்டோம். முதல் கல்வெட்டு ஆட்சியாண்டு இல்லை. இரண்டாம் கல்வெட்டில் உள்ளது. இங்குக் குறிக்கப்படும் இரு அரசர் பெயர்களில் பலர் உள்ளனர். கல்வெட்டறிஞர் குடந்தை சேதுராமன், பாண்டிய மன்னர் பலரை இனங் கண்டுள்ளார். அவருடைய பாண்டிய வரலாற்றிலும் இங்குக் குறிக்கப்படும் அரசர்கள்…
-
தென்காசி பாண்டியர் வரலாற்றில் மாற்றம்.
தென்காசி பாண்டியர் வரலாற்றில் மாற்றம். இன்னும் சில முறையான ஆவணங்களிலும். படி எடுக்கபடாதா கல்வெட்டுகளும் இன்னும் கருவறை பகுதியில் படிக்க படாதா செப்பேடுகளும் முறையான ஆய்வுகள் மேற்கொண்டால் தென்காசி பாண்டியர் மற்றும் கயத்தாறு, வள்ளியூர் வரலாறும் தெளிவாக எடுத்துக் கொண்டு வர முடியும் . வரலாற்றில் நடந்த மாற்றம் அனைவரும் அறிய வரும். #பாண்டியர்கள்_தேடி_பயணம்#pandya#Kingdom#பிற்கால_மன்னர்கள்
-
விஸ்வநாத நாயக்கர் 1535 கி.பி இல் பாளையக்கார் முறையை நிறுவினார்.
விஸ்வநாத நாயக்கர் 1535 கி.பி இல் பாளையக்கார் முறையை நிறுவினார். வரகுண சிந்தாமணி பூலித்தேவன் குறுநில மன்னராக பொறுப்பேற்ற ஆண்டு 1378 கி.பி 1535-1378=157 ஆண்டுகள் வரலாறு என்ன ஆனது என்று பல வரலாற்று ஆய்வாளர்கள் இதைப் பற்றி யோசிக்கவில்லை. விஸ்வநாத நாயக்கர் பாளையம் பிரிப்பதற்கு முன்பாக இருந்தது என்பதை சில மூடர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பாண்டிய வரலாறு குறித்து கொல்லம் கொண்டான் என்ற பாண்டியன் பற்றியும் 1715…
-
பிற்காலப் பாண்டியர் காலத்தில் கொற்கை
#பிற்காலப்பாண்டியர் காலத்தில் கொற்கை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. கொற்கைக்கு இரண்டு கல் தொலைவிலுள்ள ஆத்தூரில் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் என்னும் ஸ்ரீ வல்லபனின் ஆறாம் ஆட்சியாண்டுக் (கி.பி.1127) கல்வெட்டு கிடைத்துள்ளது. அது #அரசன் திருச்சிற்றம் பல தேவநல்லூரில் உள்ள நிலங்களுக்கு வரியை நிர்ணயம் செய்தான் என்று தெரிவிக்கையில், அவ்வூர் கொற்கை நாட்டில் உள்ளது என்று கூறுகிறது. ஊராக இருந்து கொற்கை ஒரு நாட்டின் தலைமையிடத்தை பெற்றுத் திகழ்ந்திருக்கிறது என்று மேற்கூறிய…
-
இரணியூர்
இரணியூர் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த ஊராகும். இவ்வூரைச் சார்ந்த ஊருணிக்கரைகளிலும், கண்மாய்க் கரைகளிலும், வயல் வெளிகளிலும் பல #முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அத்தாழிகளில் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு சிவப்பு நிறத்தில் செய்யப்பட்ட மட்கலங்கள் பல கிடைத்துள்ளன. இவை தொன்மைச் சிறப்பு உடையவை. சங்க காலத்திற்குச் சற்று பிற்பட்டவை. கி.பி. 4-5ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. எனவே, 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்கள். என்பது…
-
கொற்றவை வேட்டுவ வரி
பாண்டிநாட்டு #வேட்டுவர் தம் நிலத் தெய்வமாம் #கொற்றவையை வழிபடப் பாடிய வரிப் பாட்டின் இறுதியில் தங்கள் நாடாளும் #பாண்டியனை வாழ்த்தும் விதமாக, பொய் கூறி வாழ்த்தாது. #பாண்டியர் குலத்தவர்க்கு உரிய மலையாம் #பொதிகைமலை கூறி, அதற்கு உரியோன் என்ற தொடரால் குறிப்பிட்டு வாழ்த்தி இருப்பது வேட்டுவ வரியில் உள்ள வரிகள் “பொறை உயர் பொதியில் பொருப்பன், பிறர் நாட்டு கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுசு விறல்வெய் யோனே”. —————#வேட்டுவ_வரி…
-
மூவிருந்தாழி சுந்தரபாண்டியன் தானம் கல்வெட்டு
#திருநெல்வேலி மாவட்டம் #சங்கரன்கோவில் வட்டம் #மூவிருந்தாழி என்ற கிராமத்தில் இருக்கக்கூடிய சிவன் கோயில் முன்பாக நடப்பட்டுள்ள கல்லில் பிற்கால பாண்டியன் பேரரசர் திருபுவன சக்கரவர்த்தி கோனேரிமை கொண்டான் சுந்தரபாண்டியன் தானம் கல்வெட்டு திருமாணிக்கீஸ்வரமுடையார் கோவிலுக்குத் திருமடை விளாக இறையிலி தேவதானமாக நிலம் வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. கல்வெட்டு : 1. ஸ்வஸ்தி ஸ்ரீ இவை வே 2. தி நாயகன் எழுத்து திரிபுவன சக்கரவ 3. த்தி கோநேரின்மை கொண்டான் நெய்…