மீன் கொடி பிடித்து மீனாட்சி அம்மன் வரவேற்பு

சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா . மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். சித்திரைத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம்  மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

தேரோட்டம்

இந்த நிலையில், சித்திரைத்திருவிழாவின் 11-ம் நாளான (வெள்ளிக்கிழமை) மற்றொரு முக்கிய விழாவான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது .அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர்-பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க மாசி வீதிகளில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது

இதில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக பாண்டிய குல பேரரசி அன்னை மீனாட்சி அம்மனை வரவேற்கும் விதமாக மீன் கொடி ஏந்தி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாண்டியநாடு அறக்கட்டளை சார்பாக 100 சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

முருகப்பெருமானும், விநாயகர் பெருமானும், நாயன்மார்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் செல்கின்றனர். அசைந்து வரும் தேரை காண்பதற்காக சங்கு முழங்கியபடியும், இசை வாத்தியங்கள் முழங்கியபடியும், அரகரா சிவசிவா முழக்கத்துடனும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாசி வீதிகளில் குவிந்துள்ளனர். பக்தர்கள் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தோம் .

பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *