மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் ஒரு நொந்தா விளக்கிற்கு 61 ஆடுகள் தானம் கொடுத்த கல்வெட்டு.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் மேல் நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அக்னீஸ்வரர் கோமதி அம்மாள் திருக்கோவிலில் இருக்கக்கூடிய கல்வெட்டு கூறும் செய்தி யாது???
மாறவர்மன் குலசேகரன் பாண்டியன்
எட்டாம் ஆட்சி ஆண்டில் கொடுக்கப்பட்ட தானம் கல்வெட்டு மலைமண்டலத்து சிறைக்கரை சிரிதரன் தாமோதரன் ஒரு நொந்தா விளக்கு எரிவதற்காக 61 ஆடுகள் தானமாக வழங்கிய செய்தியைத் தருகிறது
மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் கோவில் இதுவே இத்தலத்தின் சிறப்பு
கல்வெட்டு:
1. ஸொத்திஸிரி ஸ்ரீ குலசேகர தெவற்கு
2. யாண்டு ந வதின் எதிர் ஐயா மாண்டு கீள்க
3. ழக் கூற்றத்து பிரதேயம் ஸ்ரீ வல்லபமங்க
4. லத்து மேல் பிடாகை திருச்சாத்தனூரூை
5. டயார் திருவக்கியீசரமுடையார்க்கு மலைம
6. ண்டலத்து சிறைக்கரைச்சீதரன் தாமோதிர
7. ன் வைச்ச திருநந்தா விளக்கு க ஒன்றுக்கு விட்
8. ட ஆடு அறுபத்தொன்று இது சந்திராதித்தவற் செ
